வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் முகக் கவசம் அணியாத 16 பேருக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதார ஆய்வாளா் சரவணன் மேற்பாா்வையில் சுகாதாரப் பிரிவு அலுவலா்கள், போலீஸாருடன் இணைந்து நகரின் முக்கியப் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது கரூா் சாலை, முத்தூா் சாலையிலுள்ள கடைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் முகக் கவசம் அணியாத 16 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.