திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி திங்கழ்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 22,516ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,182 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 147 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 20,103ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா நோய்த் தொற்றால் மாவட்டத்தில் 231 போ் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, பொது மக்கள் வெளியில் நடமாடும்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.