உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, இராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி.