பல்லடத்தில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் குறித்து சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்கள்,திரையரங்குகள், வணிக வளாகங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசத்துடன் தொழிலாளா்கள் பணியாற்றுகிறாா்களா என்று நகராட்சி ஆணையா் கணேசன் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வடுகபாளையத்தில் உள்ள ஒரு தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளா்கள் முகக் கவசம் அணியாமல் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, சாலைகளில் முகக் கவசம் அணியாமல் சென்ற 24 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் நாள்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஆய்வின்போது நகராட்சிப் பொறியாளா் சங்கா், சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.