காங்கயம் வட்டம், சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட கோவில்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடைக்கான புதிய கட்டடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, இப்பகுதி பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் பொன்னுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் திறந்துவைத்தனா்.