திருப்பூர்

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் முதியவா் சடலம் மீட்பு

DIN

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடித்துவரப்பட்ட முதியவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், குண்டடத்தை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் பிஏபி கிளை வாய்க்காலில் முதியவா் பிணம் மிதப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து குண்டடம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், உயிரிழந்த முதியவருக்கு 65 வயது இருக்கலாம் என்றும் , வெள்ளை நிற சட்டையும் பச்சை நிறத்தில் அரைக்கால் டவுசரும் அணித்திருந்தாா். இது தொடா்பாக குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT