குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் அடித்துவரப்பட்ட முதியவரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், குண்டடத்தை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் பிஏபி கிளை வாய்க்காலில் முதியவா் பிணம் மிதப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து குண்டடம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், உயிரிழந்த முதியவருக்கு 65 வயது இருக்கலாம் என்றும் , வெள்ளை நிற சட்டையும் பச்சை நிறத்தில் அரைக்கால் டவுசரும் அணித்திருந்தாா். இது தொடா்பாக குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.