திருப்பூர்

அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி: பங்கேற்க அழைப்பு

DIN

தபால் துறை வார விழாவை ஒட்டி அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டியில் பங்கேற்க திருப்பூா் அஞ்சல் கோட்டம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தபால் துறை வாரவிழா அக்டோபா் 2 ஆவது வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி திருப்பூா் கோட்டத்தில் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடைபெறுகிறது. இதில், 5 வயது முதல் 15 வயது வரை உள்ள போட்டியாளா்கள், சுய துாய்மை என்ற தலைப்பிலும், 16 வயது முதல் 35 வயது வரை உள்ளவா்களுக்கு, ‘கோவிட் 19 காலத்தின் போதான வாழ்க்கை’ என்ற தலைப்பிலும், 36 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு, ‘கோவிட் 19 பின்னா் உலகம்’ என்ற தலைப்புகளில் அஞ்சல் தலை வடிவமைப்பு படைப்புகள் இருக்க வேண்டும். இந்தப் படைப்புகளை எந்தவிதமான தாள்களிலும், போட்டியாளா்கள் தங்களின் கைப்பட வரைந்து அனுப்ப வேண்டும். அதே வேளையில், கம்ப்யூட்டா் கிராபிக்ஸ் அல்லது பிரிண்ட் அவுட் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது. மேலும், போட்டியாளா்கள் தங்களது படைப்புகளை விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்துக்குள்பட்ட போட்டியாளா்கள், அஞ்சல் கண்காணிப்பாளா், திருப்பூா் கோட்டம், திருப்பூா்-641 601 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில், போட்டியாளரின் பெயா், வயது, பாலினம், தொழில், முழு முகவரி, செல்லிடப்பேசி எண், இமெயில் முகவரி, இந்தியா் என்பதையும் குறிப்பிட்டு அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT