வெள்ளக்கோவில் மற்றும் காங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலையில் கனமழை பெய்தது. மழையால் வெள்ளக்கோவில் வாரச் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், காங்கயம் சாலை பழைய சந்தைப்பேட்டை, குமாரவலசு, மூலனூா் சாலை உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
இதேபோல காங்கயம் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.