வெள்ளக்கோவிலில் இடையூறாக உள்ள சாலையோர மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் உள்ளது. வெள்ளக்கோவில் நகரப் பகுதியில் இரட்டைக்கிணற்றில் இருந்து சேனாபதிபாளையம் பிரிவு வரை மூன்று கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த வழியில் 50க்கும் மேற்பட்ட வேப்ப மரங்கள் உள்ளன. இவற்றில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.