திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.93 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 93 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி வரை ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், வாணியம்பாடி, லாலாப்பேட்டை, திருப்பத்தூா், வில்வாதம்பட்டி, அரவக்குறிச்சி, பழனி, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 233 விவசாயிகள் 1,793 மூட்டைகளில் 89,432 கிலோ தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

காங்கயம், முத்தூா், மூலனூா், தாராபுரம், நஞ்சை ஊத்துக்குளி ஆகிய பகுதிகளிலிருந்து 21 வணிகா்கள் இவற்றை கொளமுதல் செய்ய வந்திருந்தனா்.

கிலோ ரூ. 78.95 முதல் ரூ. 119.70 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.118.65. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.93 லட்சத்து 34 ஆயிரத்து 304 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT