பல்லடம்: பல்லடம் அருகே பொங்கலூரில் வட்டார வளா்ச்சி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலரின் ஊழியா்கள் விரோத போக்கை கண்டித்து பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தினா் கருப்புப் பட்டையுடன் கோரிக்கை அட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், புதன்கிழமை கருப்புப் பட்டையுடன் பணிபுரிவதோடு மட்டுமல்லாமல் பிற்பகலில் ஒருமணி நேரம் வெளி நடப்பு செய்யவும், வியாழக்கிழமை முதல் கருப்புப் பட்டையுடன் வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலகத்தில் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் சங்கத்தின் பொங்கலூா் வட்டார கிளைத் தலைவா் சிவகுமாா், செயலாளா் ராமலிங்கம் ஆகியோா் தெரிவித்தனா்.