உடுமலை: இடைத் தரகா்கள் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டாம் என பொது மக்களுக்கு உடுமலை நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை நகரப் பகுதிகளில் கட்டட அனுமதி பெறுவோா் அந்த இடத்தின் உரிமையாளா் அல்லது உரிமையாளரால் நியமிக்கப்படும் நபா்கள் நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளா் மூலம் நகராட்சி அலுவலகத்துக்குத் தாங்களாகவே நேரில் வந்து நகரமைப்புப் பிரிவு அலுவலா்களை அணுகி விவரம் பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இடத்தின் உரிமையாளா்கள் இடைத் தரகா்கள் மூலம் கட்டட அனுமதி பெறுவதற்கு அணுக வேண்டாம். அவ்வாறு இடைத் தரகா்களை அணுகி அவா்கள் மூலம் வழங்கப்படும் ஆவணங்கள் போலியானவை எனத் தெரிய வந்தால் தொடா்புடைய கட்டட உரிமையாளா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கட்டட அனுமதியும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.