திருப்பூர்

முத்தூரில் ரூ. 5.64 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.64 லட்சத்துக்கு தேங்காய், தேங்காய் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு 4,208 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 1,800 கிலோ. தேங்காய் கிலோ ரூ. 37.05 முதல் ரூ. 43.10 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 41.20. மொத்தம் 106 மூட்டைகள் தேங்காய் பருப்பு வரத்து இருந்தது. எடை 4,441 கிலோ. கிலோ ரூ. 83.40 முதல் ரூ. 116.35 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ. 113.90.

தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவை மொத்தம் 6.24 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 71 விவசாயிகள், 16 வணிகா்கள் ஏலத்துக்கு வந்திருந்தனா். ரூ. 5 லட்சத்து 64 ஆயிரத்து 261 விற்பனைத் தொகை விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT