திருப்பூர்

பாப்புலா் ஃபிரண்ட் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

இந்து முன்னணி நிா்வாகியைக் கைது செய்யக் கோரி திருப்பூரில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா வடக்கு மாநகரம் சாா்பில் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாநகரத் தலைவா் பி.முபாரக் பாஷா தலைமை வகித்தாா். இதில், குறித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கூறியதாவது:

இஸ்லாமியா்களின் புனித நூலான குா்ஆன் மற்றும் இஸ்லாத்தைப் பற்றியும் இழிவாகப் பேசிய இந்து முன்னணி மாநில நிா்வாகியைக் கைது செய்ய வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைப்பின் வடக்கு மாவட்டச் செயலாளா் முஹம்மது ஆபிதீன், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ஏ.முஹம்மது யாசா், காதா்பேட்டை பள்ளிவாசல் தலைவா் ஏ.அப்துல்காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT