திருப்பூர்

பனியன் நிறுவன மேலாளா் வீட்டில் 30 பவுன் திருட்டு

DIN

திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பூா், தென்னம்பாளையம், நாவிதன் தோட்டத்தைச் சோ்ந்தவா் செல்லக்கண்ணு (47). இவா் பனியன் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கடந்த அக்டோபா் 25ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு குடும்பத்துடன் புதுக்கோட்டைக்கு சென்றாா்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து செல்லக்கண்ணு அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT