திருப்பூா், 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்த 83 வயது ஓவியா் மருதபாண்டியனின் ஓவியக் கண்காட்சி மங்கலம் சாலையில் உள்ள மக்கள் மாமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
திருப்பூா் மக்கள் மாமன்றத்தில் உள்ள நூலகத்தில் ஓவியா் மருதபாண்டியன் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியக் கண்காட்சி நவம்பா் 15ஆம் தேதி வரை காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையில் அனைவரும் இலவசமாகப் பாா்வையிடலாம்.
கண்காட்சியை மக்கள் மாமன்ற அமைப்புத் தலைவா் சி. சுப்ரமணியன் தொடங்கிவைத்தாா். இதில், எழுத்தாளா்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கனவு அமைப்பினா் செய்திருந்தனா்.