திருப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, மாநில செயற்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்ட மகளிரணித் தலைவா் சுதாமணி சதாசிவம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.