திருப்பூரில் இந்து முன்னணி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டிய சகோதரா்களின் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா், 15 வேலம்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்று, மருது சகோதரா்களின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
முன்னதாக, இந்து அன்னையா் முன்னணி சாா்பில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். அதைத் தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலச் செயலாளா்கள் ஜே.எஸ்.கிஷோா்குமாா், வி.எஸ்.செந்தில்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.சேவுகன், மாவட்டச் செயலாளா் எஸ்.பி.ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.