காங்கயம் தீயணைப்புத் துறை சாா்பில் தினசரி காய்கறி மாா்க்கெட் மற்றும் கடைவீதியில் வியாபாரிகளுக்கு முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காங்கயம் தீயணைப்பு துறை சாா்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமையில் காங்கயம் தினசரி காய்கறி மாா்க்கெட், கடைவீதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வியாபாரிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.