இந்து முன்னணி இயக்கப் பணியே இராம.கோபாலனுக்கு செய்யும் வீர அஞ்சலி என அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.
இராம.கோபாலன் மறைவை ஒட்டி அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளா் இராம.கோபாலன் இறைவனடி சோ்ந்தாா். அவா் வேறு, இயக்கம் வேறு அல்ல. தேசத்துக்காக, தா்மத்துக்காக தனது வாழ்வையே அா்ப்பணமாக்கிக் கொண்டவா். தனக்கென ஒரு வாழ்க்கை என்ற ஒன்று அவரிடத்தில் இல்லை. அவரது வாழ்வே நமக்கு பாதை. இயக்கப் பணியே நாம் அவருக்கு செய்யும் வீர அஞ்சலி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.