திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 15,237 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் 79 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்ப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15,316ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பல்வேறு மருத்துவமனைகளில் 575 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் குணமடைந்த 79 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 14,535ஆக அதிகரித்துள்ளது.