திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்ததால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பூா் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையில் பரவலாக மழை பெய்தது. இதில், மாநகரில் தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பூா், அங்கேரிபாளையம் சாலையில் பாலு இன்னோவேஷன் காலனியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாலு இன்னோவேஷன் காலனியில் 71 குடியிருப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக கழிவுநீா்க் கால்வாய் அமைத்துக் கொடுக்காததால் அவதிக்குள்ளாகி வருகிறோம். கடந்த ஆண்டு எங்களது பகுதியில் சரியான திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்ட மழைநீா் வடிகால் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கழிவுநீா் வெளியே செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டதால் குடியிருப்புகளுக்குள் மழை நீா் தேங்கி நிற்கிறது.

எங்களது பகுதியில் தேங்கும் சாக்கடை, மழை நீரை 3 எச்பி மோட்டாா் கொண்டு வெளியேற்றி வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.

மாவட்டத்தில் பரவலாக மழை: அதேபோல திருப்பூா் மாவட்டத்தில் அவிநாசி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி வரையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்: அவிநாசி-80, திருப்பூா் தெற்கு-67, திருப்பூா் வடக்கு-60, ஆட்சியா் அலுவலகம்-44, வெள்ளக்கோவில் வருவாய்த் துறை அலுவலகம்-30, மடத்துக்குளம்-29, பல்லடம், ஊத்துக்குளி-27, உடுமலை-25, தாராபுரம்-20, காங்கயம்-13.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT