திருப்பூா்: திருப்பூரில் 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோவில் கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், போயம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரஹ்மான் (எ) முகம்மது மைதீன் (19). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ 2 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இது குறித்து திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதன்பேரில் போக்சோ சட்டத்தின் (குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டம்) கீழ் முகம்மது மைதீனை காவல் துறையினா் கைது செய்தனா்.