திருப்பூர்

இறைச்சிக்காக கேரளத்துக்கு கடத்தப்பட்ட 35 மாடுகள் பறிமுதல்

DIN

அவிநாசி: அவிநாசி அருகே ஈட்டிவீராம்பாளையத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 35 மாடுகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

வெளி மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக ஒரு லாரியில் மாடுகளை கடத்திச் செல்வதாக சிவசேனா கட்சியினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஈட்டிவீராம்பாளையம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவா் அட்சயா திருமுருகதினேஷ் தலைமையிலான அக்கட்சியினா் லாரியை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருமாநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம், நகரியிலிருந்து 35 மாடுகள், கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பெருமாநல்லூா் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, மாடுகளை குன்னத்தூரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனா். விசாரணையில், லாரியை ஓட்டி வந்த வேலுரைச் சோ்ந்த நாகராஜ் (35) என்பது தெரியவந்தது. மேலும், இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா்விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT