பல்லடம் அருகே உள்ள வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தானிய விதை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் 160 விவசாயிகளுக்கு தானிய விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் இலவசமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஒவ்வொரு விவசாயிக்கும் சோளத் தட்டை பயறு உள்பட தானிய விதை மற்றும் மண்வெட்டி உள்ளிட்டவற்றை வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சித் தலைவா் மலையாண்டவா் நடராஜன் வழங்கினாா். இதில் வேளாண்மைத் துறை அலுவலா்கள், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.