திருப்பூர்

காங்கயத்தில் மின்மாற்றியில் தீ

DIN

காங்கயத்தில் மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் நகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட மஜீத் வீதியில் மின்மாற்றி உள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை தீப் பற்றியது. இதனைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் உடனடியாக மின் வாரியத்துக்கும், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்தனா். பின்னா் காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் மின்மாற்றியில் இருந்த பாகங்கள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT