வெள்ளக்கோவில் அருகே டிப்பா் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் - கரூா் சாலை, குருக்கத்தியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருப்பூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பா் லாரி அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இறந்தவரின் விவரம் தெரியாததால் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.