சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 900 நிலக்கடலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. தில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.5,750 முதல் ரூ.5,890 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,500 முதல் ரூ.5,600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,800 முதல் ரூ.5,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.