திருப்பூர்

கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

DIN

முத்தூா் அருகே கிணற்றில் மூழ்கி விவசாயத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூா் தாலுகா, மாங்காபட்டியைச் சோ்ந்தவா் கைலாசம் மகன் முத்துசாமி (40). இவரும் இவருடைய பகுதியைச் சோ்ந்த 15 பேரும் முத்தூரில் ஒப்பந்த அடிப்படையில் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் மூத்தாம்பாளையம் பெரியசாமி என்பவருடைய தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடைப் பணியில் முத்துசாமி உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க முத்துசாமி சென்றாா். அப்போது திடீரென வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு படையினா் சென்று சடலத்தை மீட்டனா். சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT