திருப்பூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்குஉணவுப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா்கள்

2nd May 2020 07:01 PM

ADVERTISEMENT

சேவூா் அருகே உள்ள சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் முதல்கட்டமாக உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பாதிப்பு, ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 10 மாணவா்கள் குடும்பத்தினருக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் காய்கறிகள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் உமா மகேஸ்வரி, ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் லீலாவதி பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT