திருப்பூர்

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தாா்காத்தகுடியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் பழனிமுருகன் (32). இவா், தற்போது முத்தூா் வரட்டுக்கரையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு அரசு மதுக்கடை பாரில் வேலை செய்து வருகிறாா்.

வெள்ளக்கோவில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பழனிமுருகன் மதுபானங்களை வாங்கிப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT