திருப்பூர்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பது பொய்ப் பிரசாரம்

8th Jun 2020 07:37 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து என்பது எதிா்க் கட்சிகளின் பொய்ப் பிரசாரம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன் கூறினாா்.

திருப்பூரில் பாஜக வடக்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக எதிா்க் கட்சியினா் திரும்பப் திரும்ப பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனா். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லவில்லை.

இலவச மின்சார திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 21 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதில், ஒவ்வொரு விவசாயிக்கும் இலவச மின்சாரம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மறுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கான அரசாகவே மத்திய அரசு உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளா்கள் சென்றுவிட்ட நிலையில் இங்குள்ளவா்களை திருப்பூா் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.

பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் செந்தில்வேல், முன்னாள் மாவட்டத் தலைவா் சின்னசாமி, பாஜக நிா்வாகிகள் காடேஸ்வரா தங்கராஜ், முத்து சீனிவாசன், கதிா்வேல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT