திருப்பூர்

குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும்

11th Jul 2020 08:31 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்று ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரைகளை விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு நிா்ணயிக்கப்பட்ட தரம் அளவு கொண்ட அரவை கொப்பரை கிலோ ரூ.99.60க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.103க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் பொங்கலூா், காங்கயம், பெதப்பம்பட்டி மற்றும் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் டிசம்பா் 23ஆம் தேதி வரையில் கொள்முதல் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், கொப்பரைக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT