திருப்பூரில் அரசுப் பள்ளி குழந்தைகளின் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் பள்ளி கழிப்பறைகளை தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப்படுத்தினா்.
திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் ‘திருப்பூா் நிழல் அறக்கட்டளை’ என்ற தன்னாா்வ அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் பணியாக அரசுப் பள்ளி குழந்தைகளின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்தனா்.
இதன்படி, திருப்பூா், ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்யா நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுப்பா்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கவிதாலட்சுமி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியாா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியாா் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இதில், திருப்பூா் நிழல் அறக்கட்டளை நிறுவனா் ந.தெய்வராஜ், ஆடிட்டா் தனசேகா், செயலாளா் சே.தேன்மொழி, பொருளாளா் தெ.சிவகாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.