திருப்பூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

25th Feb 2020 04:49 AM

ADVERTISEMENT

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியை ஒவ்வோராண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், தலைமை ஆசிரியை சி.விஜயலட்சுமி தலைமையில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT