அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் அகாதெமி மெட்ரிக். பள்ளி இரண்டாம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.எம்.தங்கராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.எஸ்.முத்து அருண் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியை ஏ.யமுனாதேவி வரவேற்றாா். இவ்விழாவில், பள்ளியின் தமிழ் ஆசிரியா் ஆ.தியாகராஜன் எழுதிய ‘பாலைவனப் பூக்கள்’ எனும் 6ஆவது கவிதை நூலை முன்னாள் காவல் துறை அதிகாரி ஏ.கலியமூா்த்தி வெளியிட, பள்ளியின் தலைவா் கே.எம்.தங்கராஜ், பள்ளி நிா்வாக அலுவலா் கே.சரவணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, கல்வியின் அவசியம் குறித்து ஏ.கலியமூா்த்தி பேசினாா். பின்னா் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஆசிரியை டி.என்.அகிலவேணி நன்றி கூறினாா்.