திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்:இளைஞா் உயிரிழப்பு

25th Feb 2020 04:44 AM

ADVERTISEMENT

காங்கேயம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே உள்ள நீலக்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் சபீபுல்லா மகன் சபீா் (18). இவா் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் காங்கயம் செல்வதற்காக வீட்டின் முன்பு சாலையைக் கடந்துள்ளாா்.

அப்போது காங்கயத்தில் இருந்து திருப்பூா் நோக்கிச் சென்ற லாரி, சபீா் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT