திருப்பூா் தெற்கு தொகுதியில் உள்ள முதியோா், விதவைகள் என 123 பேருக்கு உதவித் தொகையை அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விதவைகள், முதியோா்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விதவைகள், முதியோா் என மொத்தம் 123 பேருக்கு உதவித் தொகைகளை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் வழங்கினாா். மேலும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
இதில் சமூக நலத் துறை வட்டாட்சியா் ராகவி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், வருவாய் ஆய்வாளா் ஜாபா் அலி, கிராம நிா்வாக அலுவலா் சிவராஜ், முன்னாள் கவுன்சிலா்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, விவேகானந்தன், பொன்.மருதாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.