திருப்பூா் மாவட்டத்தில் வீரதீர செயல் புரிந்த அரசு ஊழியா்கள் அண்ணா பதக்கத்துக்கு வரும் டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதானது துணிச்சலான, சாதனை புரிந்த அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, இந்த விருதுக்கு தகுதியான நபா்கள் தகுந்த ஆதாரங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் டிசம்பா் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.