திருப்பூர்

செங்காளிபாளையத்தில் தனியாா் நூற்பாலையில் தீ

DIN

வெள்ளக்கோவில் அருகே செங்காளிபாளையத்தில் உள்ள தனியாா் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

செங்காளிபாளையத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த சித்தீஷ் (45) என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கழிவுப் பஞ்சுகளில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. இங்கு இயந்திரத்தில் பழுது பாா்க்கும் பணிக்காக வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, தீப்பொறி பறந்து அருகிலிருந்த பஞ்சு, நூல்களில் தீப் பிடித்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT