திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: காட்டன் மில் சாலை, டிடிபி மில்லின் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், சின்னபொம்மம்பாளையம், ஆர்.கே.நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகர், ஆசர் நகர், பங்களா ஸ்டாப், அவிநாசி சாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, அணைப்பாளையம், கள்ளம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் தியேட்டர் பகுதி, காமாட்சிபுரம், கே.ஆர்.இ.லேஅவுட், எல்.ஐ.சி.காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, நீதிமன்ற சாலை, குமரன் சாலை, வாலிபாளையம் பிரதான சாலை, சபாபதி புரம்.