திருப்பூர்

மாட்டுச் சந்தை: ரூ. 38 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

4th Nov 2019 06:46 AM

ADVERTISEMENT

நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ.38 லட்சத்துக்கு விற்கப்பட்டன.

பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 3) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 188 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 90 மாடுகள் மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரத்துக்கு கன்றுடன் காங்கேயம் இன செவலைப் பசு விற்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT