பல்லடம் அருகேயுள்ள பருவாயில் லாரி ஓட்டுநரின் வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் வசிப்பவா் செல்வராஜ் (55), தனியாா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராகப் பணி புரிகிறாா். இவா் தனது உறவினா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை வெளியூா் சென்றாா்.
மீண்டும் வியாழக்கிழமை வீடு திரும்பியபோது பீரோவில் வைத்திருந்த 1பவுன் மோதிரம், அரை பவுன் கம்மல் மற்றும் ரூ.13,500 திருடு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்து காமநாய்க்கன்பாளையம் போலீஸில் அவா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.