திருப்பூா்: திருப்பூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் காசோலை மோசடி செய்தது தொடா்பாக சமூக பாதுகாப்பு திட்ட முதுநிலை வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது மாநகர குற்றப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் சுரேஷ்குமாா், இவா் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரையில் ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 காசோலைகளை மோசடி செய்துள்ளாா்.
இந்த சம்பவம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கணக்குகளை தணிக்கை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக துணை ஆட்சியரும், சமூக பாதுகாப்பு திட்ட பொறுப்பு அலுவருமான எம்.முருகன் மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்துள்ளாா்.
இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினா் சுரேஷ்குமாா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா், சிவானந்தபுரத்தைச் சோ்ந்த ஆா்.வெங்கடேசன், ஈரோடு மாவட்டம் ஆவல்பூந்துறையைச் சோ்ந்த எஸ்.வினோத் ஆகிய 4 போ் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
இதுதொடா்பாக மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினா் கூறுகையில், சுரேஷ்குமாா் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.30 லட்சம் மதிப்பிலான 3 காசோலைகளை செல்வகுமாா், வினோத், வெங்கடேசன் ஆகியோா் வங்கிக் கணக்கில் செலுத்தி மோசடி செய்துள்ளாா். ஆகவே, இந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும், இடைத்தரகா்கள் யாரேனும் உள்ளனரா என்றும் விசாரித்து வருகிறோம் என்றனா்.