சேவூர் அருகே கருமாபாளையத்தில் பாம்பு கடித்து பெண் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
சேவூர் அருகே கருமாபாளையத்தில் சத்திவேல் தோட்டத்தில் தங்கி குப்புசாமி (40), இவரது மனைவி லோகுமணி (35), ஆகியோர் கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு வைஷ்ணவி (8) என்ற மகளும் கோகுல் (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்த லோகுமணி, காற்றுக்குக் கீழே விழுந்து கிடந்த துணிகளை எடுத்துள்ளார். அப்போது துணிக்குள் மறைந்திருந்த பாம்பு லோகுமணியின் இடது கையை கடித்துள்ளது.
லோகுமணியின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லோகுமணி உயிரிழந்தார். இதுகுறித்து சேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.