வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இங்குள்ள சோழீஸ்வர சுவாமி கோயில், முத்தூர் ஈஸ்வரன் கோயில், மயில்ரங்கம், லக்கமநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், கண்ணபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயில்களில் உள்ள நந்தி எம்பெருமானுக்கு விசேஷ அலங்கார, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் இதில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.