கருவலூர் துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம்.