நீலகிரி

சாலை விபத்தில் 2 போ் பலி

DIN

உதகை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பாய்ஸ் கம்பெனி பகுதியைச் சோ்ந்தவா் ரித்திக் (21), கோத்தகிரியைச் சோ்ந்தவா் ரிக்ஷன் (21). இருவரும் கேத்தி பகுதியில் செயல்படும் தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா். இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் கேத்தி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது எதிரே வந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனா். இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT