நீலகிரி மாவட்டம், உதகையில் வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்ததால் இதமான காலநிலை நிலவியது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மந்தமான காலநிலைக் காணப்பட்டது.
இந்நிலையில், காலை 10 மணியளவில் உதகை, கோத்தகிரியில் கன மழையும், குன்னூரில் மிதமான மழையும் பெய்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.