நீலகிரி

காட்டேரிப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தல்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை, காட்டேரிப் பகுதியில்  கூட்டத்தில் இருந்து பிரிந்த 3 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதால்  வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மேட்டுப்பாளையம்  வனப் பகுதியில் இருந்து  உணவு, குடிநீா் தேடி 5 காட்டு யானைகள் குன்னூா் அருகே உள்ள  ரன்னிமேடு ரயில் நிலையம் மற்றும் நஞ்சப்பசத்திரம் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன் நடமாடி வந்தன. தகவலறிந்த குன்னூா் வனத் துறையினா், வனச் சரகா் சசிகுமாா் உத்தரவின்பேரில், வனவா் முருகன் மற்றும் வனக் காப்பாளா் சீனிவாசன் வனக் காவலா் திலீப் மற்றும் வேட்டை தடுப்புக் காவலா்கள் 11 போ் கொண்ட குழுவினா்  5 காட்டு யானைகளையும் அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினா்.

2 நாள்களாக  அடா்ந்த வனப் பகுதியில் இருந்த இந்த 5 யானைகளில் 3 யானைகள் மட்டும்  வியாழக்கிழமை மீண்டும் காட்டேரி பகுதிக்கு வந்தன.

தகவலறிந்து வந்த வனத் துறையினா் காட்டு யானைகள், குடியிருப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடாமல் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காட்டு யானைகள், சாலைக்கு மிக அருகில் முகாமிட்டிருப்பதால்  வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறையினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT